2024 மே 22, புதன்கிழமை

தொழுநோயாளர்கள் நால்வர் சிக்கினர்

Freelancer   / 2024 மே 01 , மு.ப. 02:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

வி.ரி.சகாதேவராஜா

காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவின் கீழ் வெட்டு வாய்க்கால் பகுதியில்  தொழுநோய் கள ஆய்வு செவ்வாய்க்கிழமை (30)  நடாத்தப்பட்டது.

காரைதீவு சுகாதார உணவு அதிகாரி டாக்டர் தஸ்லிமா பஷீர் தலைமையிலான சுகாதார குழுவினர்  அப்பகுதியில் வீடு வீடாக விஜயம் செய்து ஆய்வு செய்தனர். இதில், பொதுச் சுகாதார பரிசோதகர்கள், தொழுநோய் கட்டுப்பாட்டு கள உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.

 இதன் போது ஏலவே இனங்காணப்பட்ட நான்கு தொழுநோயாளர்களுக்கு உரிய சிகிச்சை வழங்குவதற்கான  நடவடிக்கையும் ஆலோசனையும் மேற்கொள்ளப்பட்டது. அவர்கள் உரிய சிகிச்சை பெறாமல் இருந்து வந்தமை அவதானிக்கப்பட்டது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .