2025 ஓகஸ்ட் 12, செவ்வாய்க்கிழமை

திடீரென இரத்துச் செய்யப்பட்ட முக்கிய சந்திப்பு

R.Maheshwary   / 2022 ஓகஸ்ட் 28 , மு.ப. 07:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

சேஹ்ன் செயனவிரத்ன

இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே நேற்று (27) கண்டிக்கு விஜயமொன்றை மேற்கொள்ள  தீர்மானித்திருந்த நிலையில், திடீரென இந்த விஜயம்  இரத்துச் செய்யப்பட்டுள்ளது.

சீனத் தூதுவர் நேற்று மாலை 4.30 மணியளவில் மல்வத்து- அஸ்கிரிய மகாநாயக்க தேரர்களை சந்திருந்த நிலையில், நேற்று மாலை 3.30 மணிக்கு இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேயும் மல்வத்து- அஸ்கிரிய மகாநாயக்க தேரர்களை சந்திப்பதற்கு தீர்மானித்திருந்தார்.

எனினும் இறுதி நேரத்தில் அச்சந்திப்பு இரத்துச் செய்யப்பட்டது.

இந்த விடயம் தொடர்பில், கண்டியிலுள்ள இந்திய உதவி உயர்ஸ்தானிகரிடம் வினவியபோது, இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே திடீர் சுகயீனமடைந்ததால், இச்சந்திப்பு இரத்துச் செய்யப்பட்டது என்றார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .