2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

துப்பாக்கிகளுக்கான அனுமதிப்பத்திரம் தொடர்பில் முக்கிய அறிவித்தல்

Editorial   / 2019 ஒக்டோபர் 22 , பி.ப. 06:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

துப்பாக்கிகளுக்கு அனுமதிப்பத்திரம் பெற்றுக்கொண்டுள்ள நபர்கள் மற்றும் நிறுவனங்கள், அடுத்த வருடத்துக்கான அனுமதிப்பத்திரங்களை பெற்றுக்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

 அனுமதிப்பத்திரங்களை வழங்கும் நடவடிக்கை கடந்த 1ஆம் திகதி முதல் டிசெம்பர் 31 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் முன்னெடுக்கப்படும் என, பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.

 டிசெம்பர் 31 ஆம் திகதிக்கு பின்னர் , துப்பாக்கிகளுக்கு அடுத்த வருடத்துக்கான அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்படமாட்டாது என்றும் அந்த அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

துப்பாக்கிகள் கட்டளைச் சட்டத்தின் 22ஆவது பிரிவுக்கு அமைய செல்லுபடியாகும் அனுமதிப்பத்திரம் இன்றி துப்பாக்கியை தம்வசம் வைத்திருப்பது தண்டனைக்குரிய குற்றாமாகும் என்றும் பாதுகாப்பு அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X