2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

துப்பாக்கிகள் காணாமல் போன சம்பவம்; விசாரணைகளை முன்னெடுக்கவுள்ள CID

Editorial   / 2019 ஜூலை 24 , மு.ப. 11:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாணந்துறை வடக்கு பொலிஸ் நிலையத்திலிருந்த துப்பாக்கிகள்  2 காணாமல் போன விடயம் தொடர்பில், விசாரணைகளை முன்னெடுக்க குற்றப்புலனாய்வு பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

இந்த மாதம் 6ஆம் திகதி டி.56 ரக துப்பாக்கிகள் இரண்டு காணாமல் ​போன நிலையில், மேல்மாகாண சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபரின் கீழ் ஆரம்பக்கட்ட விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டதற்கமைய, 15ஆம் திகதி இந்த பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, பணி நீக்கம் செய்யப்பட்டார்.

இந்த நிலையிலேயே, இது தொடர்பான விசாரணைகளை முன்னெடுக்குமாறு குற்றப்புலனாய்வு  பிரிவினருக்கு பதில் பொலிஸ்மா அதிபர் பணித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .