Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 07, புதன்கிழமை
Freelancer / 2025 மார்ச் 29 , பி.ப. 08:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
கட்டாய விடுப்பில் இருந்த பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு தங்குமிடம் மற்றும் போக்குவரத்து வசதிகளை வழங்கிய குற்றச்சாட்டில் குற்றப் புலனாய்வுத் துறையினரால் கைது செய்யப்பட்ட கோடீஸ்வர தொழிலதிபர் ஒருவரை நீதிமன்றத்தில் சரணடைவதற்கு முன்பு விடுவிக்க கடுவெல பதில் நீதவான் கமல் பிரசன்ன விஜேசிறி, இன்று (29) உத்தரவிட்டார்.
பிணை வழங்கப்பட்ட நபர் தலவதுகொட சாந்திபுர பகுதியைச் சேர்ந்த கினி தோட்ட பொல் வட்டகேயைச் சேர்ந்த சுரங்க சஞ்சீவ வீரசூரிய என்ற கோடீஸ்வர தொழிலதிபர் ஆவார்.
சந்தேகநபர் தொழிலதிபர் தனது மோட்டார் வாகனத்தைப் பயன்படுத்தி த தேசபந்து தென்னகோனுக்கு போக்குவரத்து வசதிகளை வழங்கியது தெரியவந்ததை அடுத்து, குற்றப் புலனாய்வுத் துறை சந்தேக நபரை விசாரணைக்காக இரண்டு முறை குற்றப் புலனாய்வுத் துறைக்கு அழைத்திருந்தது.
பின்னர், சந்தேக நபர் கைது செய்யப்பட்டு, தலவதுகொட பகுதியில் உள்ள ஒரு தனியார் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட பின்னர், பொலிஸ் பாதுகாப்பில் வைக்கப்பட்டார்.
மாத்தறை நீதவான் நீதிமன்றம் கடுவெல நீதவான் நீதிமன்றத்திடம் விடுத்த கோரிக்கையின் பேரில், பதில் நீதவான் கமல் பிரசன்ன விஜேசிறி, சந்தேக நபர் சிகிச்சை பெற்று வந்த தலவதுகொட பகுதியில் உள்ள தனியார் வைத்தியசாலைக்கு சென்று சந்தேக நபரை பரிசோதித்தார்.
அதன் பின்னர் அவர் இந்த உத்தரவைப் பிறப்பிக்க நடவடிக்கை எடுத்திருந்தார்.
இந்த வழக்கின் விசாரணை ஏப்ரல் 3ஆம் திகதி மீண்டும் நடைபெறும்.AN
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
29 minute ago
58 minute ago
1 hours ago