Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Simrith / 2025 மே 02 , மு.ப. 10:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
இடைநீக்கம் செய்யப்பட்ட பொலிஸ்மா அதிபர் (ஐ.ஜி.பி) தேசபந்து தென்னகோன், தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறி, பொலிஸாரிடம் பாதுகாப்பு கோரியுள்ளதாக கூறப்படுகிறது.
பாதாள உலகக் குழுத் தலைவர் கஞ்சிப்பானை இம்ரான் விடுத்ததாகக் கூறப்படும் கொலை மிரட்டல் தொடர்பான தகவலைத் தொடர்ந்து, தென்னக்கோன் நேற்று வியாழக்கிழமை பதில் ஐஜிபி பிரியந்த வீரசூரியவிடம் எழுத்துப்பூர்வ கோரிக்கையை சமர்ப்பித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தற்போது பதவியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள தென்னகோனை இம்ரான் மிரட்டியதாக கூறப்படுகிறது.
துப்பாக்கிச் சூடு சம்பவ வழக்கில் தென்னகோன் இரண்டு வாரங்கள் கைது செய்யப்படுவதைத் தவிர்த்து வந்ததால், அவரது தனிப்பட்ட பாதுகாப்பு திரும்பப் பெறப்பட்டுள்ளதாகக் கூறப்படும் நிலையில், அவரது இக்கோரிக்கை வந்துள்ளது.
இந்தக் கோரிக்கைக்கு பதிலளித்த பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால, முறையான கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தால், அது பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்றார்.
தென்னகோனின் உயிருக்கு உள்ள ஆபத்தின் அளவை மதிப்பிடுவதற்கு பொலிஸ் திணைக்களம் அச்சுறுத்தல் மதிப்பீட்டை நடத்தும் என்று அவர் கூறினார்.
இதற்கிடையில், நம்பகமான அச்சுறுத்தல் இருப்பதாக மதிப்பீட்டில் கண்டறியப்பட்டால், பொருத்தமான பாதுகாப்பு நடவடிக்கைகள் செயல்படுத்தப்படும் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
3 hours ago
5 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
5 hours ago
7 hours ago