2025 ஜூன் 30, திங்கட்கிழமை

தெபானம பகுதியில் இளைஞன் கொலை; 10 பேர் கைது

Editorial   / 2019 ஒக்டோபர் 23 , பி.ப. 01:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

பன்னிப்பிட்டிய, தெபானம பகுதியில் இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இன்று (23) அதிகாலை 12.20 மணியளவில் இந்தக் கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன், தெபானம பகுதியைச் சேர்ந்த 18 வயதான இளைஞரே கொலை செய்யப்பட்டுள்ளார்.

நீண்டகாலமாக இருந்த தனிப்பட்ட தகராறினால் இந்தக் கொலைச் சம்பவம் இடம்பெற்றிருப்பதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இரு தரப்பினருக்கு இடையில் ஏற்கனவே நிலவிய மோதல் காரணமாக இந்த கொலை இடம்பெற்றிருக்கலாம் என, ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X