2025 ஜூன் 18, புதன்கிழமை

தெமட்டகொடயிலிருந்து 30 மில்லியன் ரூபாய் பணம் மீட்பு

Editorial   / 2020 ஓகஸ்ட் 01 , மு.ப. 10:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

தெமட்டகொட பிரதேச வீடொன்றிலிருந்து, 30 மில்லியன் ரூபாய் மற்றும் 1,40,000 அமெரிக்க டொலர்கள் பணம் பொலிஸாரால் கைற்றப்பட்டுள்ளது.

நேற்று (31) இரவு 9.10 மணியளவில் கொழும்பு வடக்கு பிரிவு பொலிஸாருக்குக் கிடைத்த தகவலுக்கமைய, முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கையின் போதே, இந்த பணம் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், கைப்பற்றப்பட்ட பணம் கொழும்பு துறைமுக பொலிஸாரிடம் கையளிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

கைப்பற்றப்பட்ட இந்த பணத்தொகை போதைப் பொருள் விற்பனை மூலம் பெறப்பட்டிருக்கலாம் என்றும் பொலிஸார் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .