Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 17, செவ்வாய்க்கிழமை
Editorial / 2020 ஜூலை 23 , மு.ப. 09:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஐக்கிய தேசியக் கட்சியின் களுத்துறை மாவட்ட பொதுத் தேர்தல் வேட்பாளரும், முன்னாள் பிரதியமைச்சருமான பாலித்த தெவரப்பெருமவின் நிலைமை கவலைக்கிடமானதாக இல்லை என, நாகொடை வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றது.
நேற்று (22) மாலை மேற்கொள்ளப்பட்ட தாக்குதலையடுத்து பாலித்த தெவரப்பெரும வைத்தியசாலையில் அனுதிக்கப்பட்டதாக மத்துகம பொலிஸார் தெரிவித்தனர்.
பாலித்த தெவரப்பெருமவின் கை மற்றும் கால் ஒன்றில் காயமேற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்துகம, வெல்கந்தல பிரதேசத்தில் முன்னெடுக்கப்படும் குடிநீர் திட்டம் தொடர்பில் கண்காணிக்க அங்கு சென்றுள்ளார்.
இதன்போது, திட்டத்துடன் தொடர்புடைய ஊழியர்களால் அவர் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவத்தில் படுகாயமடைந்த அவர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதுடன், நாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
முறைப்பாட்டுக்கு அமைய குறித்த நிறுவன ஊழியர்களிடம் வாக்குமூலம் பெற்று மேலதிக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக மத்துகம பொலிஸார் கூறியுள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
29 minute ago
1 hours ago
2 hours ago