Editorial / 2022 ஒக்டோபர் 31 , மு.ப. 10:53 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஐப்பசி 2022க்கான “தேசத்தின் மனநிலை” வாக்கெடுப்பின் முடிவுகளை வெரிட்டே ரிசேர்ச் வெளியிடுகிறது
அரசாங்கத்திற்கான அங்கீகாரம் உயர்வடைந்துள்ளது, ஆனால் மிகக்குறைந்தளவான 10% என்ற அளவில் மட்டுமே உயர்ந்துள்ளது.
“தேசத்தின் மனநிலை” எனும் Gallup பாணியிலான வாக்கெடுப்பின் இரண்டாவது கட்டம் ஒக்டோபர் மாதத்தில் வெரிட்டே ரிசேர்ச்சினால் முன்னெடுக்கப்பட்டது. அரசாங்கம், நாடு, பொருளாதாரம் ஆகியவை குறித்த அங்கீகாரம், திருப்தி மற்றும் நம்பிக்கை குறித்து இது மதிப்பிட்டது.
வெரிட்டே ரிசேர்ச் மூலம் ஒருங்கிணைக்கப்பட்ட கணக்கெடுப்பு கருவியின் ஒரு பகுதியாக இந்த வாக்கெடுப்பு முன்னெடுக்கப்பட்டது. இது பிற நிறுவனங்களும் இலங்கையின் மனநிலையை ஆராய்வதற்கான வாய்ப்பை வழங்குகிறது.
“தேசத்தின் மனநிலையை” நடைமுறைப்படுத்துதல்
நாடு தழுவிய தேசிய ரீதியிலான பிரதிநிதித்துவத்தைக் கொண்ட மாதிரி பதில்களை இந்த வாக்கெடுப்பு அடிப்படையாகக் கொண்டுள்ளது. இதற்காக ஜுன் 2022ல் 1,018 இலங்கையர்களிடம் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. மாதிரி மற்றும் வழிமுறையில் அதிகபட்ச பிழைக்கான வரம்பு 3 சதவீதத்தை விடக் குறைவாகவும், நம்பக இடைவெளி 95 சதவீதமாக இருப்பதையும் உறுதிசெய்யும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. வாக்கெடுப்புக்கான பங்காளர் வான்கார்ட் சர்வே (பிரைவட்) லிமிடெட் (Vanguard Survey (Pvt) Ltd) ஆகும்.
7 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
7 hours ago