2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

‘தேசிய தின விழாவில் மஹிந்த பங்​கேற்க மாட்டார்’

Editorial   / 2019 ஜனவரி 30 , மு.ப. 09:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

பெப்ரவரி மாதம் 4ஆம் திகதி கொண்டாடப்படவுள்ள தேசிய தின விழாவில் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்‌ஷ பங்கேற்கமாட்டாரென, மஹிந்த தரப்பினர் அறிவித்துள்ளதாக உள்நாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர் கமல் பத்மசிறி தெரிவித்துள்ளார்.

மஹிந்த ராஜபக்‌ஷவின் பிரத்தியேக செயலாளர் உதித் லொக்குபண்டரா இது தொடர்பில் உள்நாட்டலுவல்கள் அமைச்சுக்கு அறிவித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

எனினும்  முன்னாள் ஜனாதிபதி, பிரதமர், தற்போதைய எதிர்க்கட்சித் தலைவர் என்ற ரீதியில் அவருக்கான அழைப்பிதழ் அனுப்பப்பட்டுள்ளதாகவும் செயலாளர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு தேசிய தினத்தில் கலந்துக்கொள்வதற்காக அழைப்பிதழ் கிடைக்கப்பெற்றுள்ள நிலையில், அதில் கலந்துக்கொள்வதா, இல்லையா? என்பது குறித்து மஹிந்த ராஜபக்‌ஷ இன்னும் தீர்மானிக்கவில்லையென, எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்‌ஷவின் ​பிரத்தியேக செயலாளர் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .