2025 ஜூலை 05, சனிக்கிழமை

தேசிய மரநடுகை வேலைத்திட்டம் இன்று ஆரம்பம்

Editorial   / 2020 ஜனவரி 01 , மு.ப. 11:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

தேசிய மரநடுகை வேலைத்திட்டம் இன்று (01) முதல் நாடளாவிய ரீதியில் ஆரம்பமாகிறது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் சுபீட்சம் மிக்க நாடு என்ற தொலை நோக்கத்துக்கு அமைவாக இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.

இலங்கையிலுள்ள 29 சதவீதமான வனவளத்தை எதிர்வரும் ஐந்து ஆண்டுகளில்  35 சதவீதமாக அதிகரிப்பதற்காக இந்த தேசிய மரநடுகை வேலைத்திட்டம் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படுகிறது.

வளரும் நாட்டுக்கு – வளரும் மரம் என இந்தத் திட்டத்துக்கு பெயரிடப்பட்டுள்ளது. 

சுற்றாடல், வனஜீவராசிகள், காணி மற்றும் காணி அபிவிருத்தி அமைச்சர் எஸ்.எம் சந்திரசேனவின் தலைமையில் இதன் ஆரம்ப நிகழ்வு இன்று முற்பகல் அநுராதபுரம் மஹமெவின பூங்காவில் இடம்பெறவுள்ளது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .