2026 மே 02, சனிக்கிழமை

தேர்தல் ஆணைக்குழு 17ஆம் திகதி கூடும்

R.Maheshwary   / 2020 டிசெம்பர் 13 , பி.ப. 11:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

தேசிய தேர்தல் ஆணைக்குழுவானது இந்த மாதம் 17ஆம் திகதி முதற்றடவையாக கூடவுள்ளது.
ஆணைக்குழுவின் தலைவர், சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா தலைமையில் ஆணைக்குழு கூடவுள்ளது.

இதன்போது தற்போதைய தேர்தல் முறை மற்றும் தேர்தல் சட்டதிட்ட திருத்தம் குறித்து விசேட கவனம் செலுத்தப்படவுள்ளதென, தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.

இந்த மாதம் 10ஆம் திகதி ஆணைக்குழுவின் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்ட எம்.எம்.மொஹமட், எஸ்.பி.திவாரத்ன, கே.பி.பி. பதிரன மற்றும் ஜீவன் தியாகராஜா ஆகியோர் தமது கடமைகளை உத்தியோகப்பூர்வமாக ஆரம்பித்திருந்தனர்.


 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .