2025 ஜூன் 18, புதன்கிழமை

தோட்டப்புறங்களில் போதைப் பொருள் ஒழிப்பை ஜனாதிபதி முன்னெடுத்துள்ளார்

Editorial   / 2020 ஜூலை 30 , பி.ப. 03:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

தோட்டப்புறங்களில் போதைப் பொருள் ஒழிப்பை முன்னெடுக்க, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ முன்னெடுத்துள்ளதாக ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஹம்பாந்தோட்டை மாட்ட வேட்பாளர் நாமல் ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் நுவரெலியா மாவட்ட வேட்பாளர் ஜீவன் ​தொண்டமான் இன்று (30) ஹட்டனில் ஏற்பாடு செய்திருந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தொடர்ந்தும் உரையாற்றிய நாமல்,

சில அரசியல்வாதிகள் வெல்லும் கட்சியுடன் இணைந்து பதவிகளைப் பெற்றுக்கொண்டு, தமது பிரதேசத்துக்கு எவ்வித சேவையும் செய்யவில்லை என்றார்.

எனினும் தொண்டமான் தொடர்ச்சியாக மஹிந்தவுடன் இணைந்து, இந்த மாவட்டத்தின் அபிவிருத்தி குறித்து கலந்துரையாடியுள்ளதுடன், பல வேலைத்திட்டங்களையும் முன்னெடுத்தார் என்றார்.

இலங்கை வரலாற்றில் மஹிந்தவின் ஆட்சி காலத்திலேயே, நுவரெலியா மாவட்டத்துக்கு அதிக அபிவிருத்திகள் முன்னெடுக்கப்பட்டதென்றார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .