S.Renuka / 2026 பெப்ரவரி 24 , பி.ப. 01:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாடு முழுவதும் இந்த ஆண்டில் இதுவரையான காலப்பகுதியில் மொத்தம் 12,165 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவிதுள்ளது.
இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில், கொழும்பு மாநகர சபைப் எல்லைக்குள் மாத்திரம் 889 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாவும் குறிப்பிட்டுள்ளது.
கொழும்பு மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (24) முதல் மூன்று நாட்களுக்கு விசேட டெங்கு ஒழிப்புத் திட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு அறிவித்துள்ளது.
டெங்கு நோயாளர்கள் அதிகளவில் அடையாளம் காணப்பட்டுள்ள பகுதிகளை இலக்கு வைத்து இந்த விசேட கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின் பதில் பணிப்பாளர் டாக்டர் கபில கண்ணங்கர தெரிவித்துள்ளார்.
இதன்போது, நாட்டின் ஏனைய மாவட்டங்களுடன் ஒப்பிடுகையில், மேல் மாகாணத்தின் கொழும்பு மாவட்டத்திலேயே அதிகளவான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகவும் கூறியுள்ளனர்.
நாடு முழுவதும் இந்த ஆண்டில் இதுவரையான காலப்பகுதியில் மொத்தம் 12,165 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கொழும்புக்கு மேலதிகமாக மாத்தறை, காலி மற்றும் கண்டி ஆகிய மாவட்டங்களிலும் அதிகளவான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக டாக்டர் கண்ணங்கர மேலும் சுட்டிக்காட்டியுள்ளனார்.
22 minute ago
31 minute ago
48 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
31 minute ago
48 minute ago