Editorial / 2026 மார்ச் 09 , பி.ப. 02:24 - 0 - {{hitsCtrl.values.hits}}

பத்தேகம பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் திங்கட்கிழமை (09) மதியம் நீர் தாங்கி ஒன்று சரிந்து வீழ்ந்ததில் ஐந்து மாணவர்கள் காயமடைந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
காயமடைந்த மாணவர்கள் அனைவரும் உடனடியாக பத்தேகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் மூவரின் நிலைமை கவலைக்கிடமாக இருந்தமையால், மேலதிக சிகிச்சைக்காக அவர்கள் காலி, கராப்பிட்டிய போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
இந்த விபத்தில் குறித்த பாடசாலையில் 6 மற்றும் 7ஆம் தரங்களில் கல்வி பயிலும் ஐந்து மாணவர்களே பாதிக்கப்பட்டுள்ளனர் என பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் பத்தேகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
8 hours ago
09 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
09 Mar 2026