2025 ஜூன் 16, திங்கட்கிழமை

நாடளாவிய ரீதியில் 1,048 பேர் கைது

Editorial   / 2020 ஜூலை 06 , பி.ப. 04:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொலிஸார் நாடளாவிய ரீதியில் முன்னெடுத்த சுற்றிவளைப்புகளில் 1,048 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 594 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், ரிப்பீட்டர் ரக துப்பாக்கிகளுடன் சந்தேகநபர்கள் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன், ஹெரோயினுடன் சந்தேகநபர்கள் 301 பேரும் கஞ்சாவுடன் 256 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், ஐஸ் ​போதைப்பொருளுடன் சந்தேகநபர்கள் 26 பேரும் சட்டவிரோத மதுபான போத்தல்களுடன் 467 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று முன்தினம் இரவு 12 மணி முதல் நேற்றிரவு 12 மணி வரை அனைத்து பொலிஸ் நிலையங்களையும் மையமாகக் கொண்டு இந்த சுற்றிவளைப்புகள் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .