2025 ஜூன் 30, திங்கட்கிழமை

நாட்டின் பல பாகங்களிலும் கடும் மழை

Editorial   / 2019 ஒக்டோபர் 24 , பி.ப. 12:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடக்கு, கிழக்கு, மேல், தென் மற்றும் சப்ரகமுவ உள்ளிட்ட நாட்டின் பல மாகாணங்களில் கடும் மழை பெய்து வருகின்றது.

இந்த பிரதேசங்களில்100 மில்லிமீற்றர் வரை கடும் மழைவீழ்ச்சி பதிவாகும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

இதன்போது, காற்றின் வேகம் அதிகரித்து காணப்படும் எனவும், அவதானத்துடன் செயற்படுமாறு பொதுமக்களை திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

இதேவேளை, இரத்தினபுரி, கேகாலை, பதுளை மற்றும் களுத்துறை4 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது.

மண்சரிவு அபாய எச்சரிக்கையானது இன்று மாலை 4 மணி வரை அமுலில் இருக்கும் என தேசிய கட்டட ஆய்வு நிறுவகதம் குறிப்பிட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X