2025 டிசெம்பர் 16, செவ்வாய்க்கிழமை

நாட்டின் பல பாகங்களில் இன்று மழை

Editorial   / 2020 ஜூன் 21 , மு.ப. 06:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

மேல், வடமேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் தென் மாகாணங்களில் இடைக்கிடையே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யுமென, வளிமண்டளவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய,  மேல், சப்ரகமுவ, மத்திய மாகாணங்களிலும் காலி, மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மில்லி மீற்றருக்கு அதிக மழை வீழ்ச்சி பதிவாகலாம் என, திணைக்களம் தெரிவித்துள்ளது.

அத்துடன், கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் பி.ப 2.00 மணிக்கு பின்னர் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென, திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .