Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 19, வியாழக்கிழமை
Editorial / 2020 ஓகஸ்ட் 28 , மு.ப. 09:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
பா.நிரோஸ்
கொவிட் தொற்று காரணமாக வீழ்ச்சியடைந்த பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்புவதற்கு, அரசாங்கம் மக்களுக்காக அறிமுகப்படுத்திய மீளுருவாக்க தொகுப்பின் மூலம், நாட்டின் தொழில்முனைவோர் மற்றும் உள்ளூர் தொழிலதிபர்கள், நாங்கள் எதிர்பாராத வகையில் பொருளாதாரத்தில் செயற்பட்டு நீடித்திருக்க முடிந்துள்ளது என, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
அத்துடன், கடனுக்கு பதிலாக முதலீடுகளை ஊக்குவிப்பதற்கு முக்கியமாக நடவடிக்கை எடுப்போம் என்றும் இந்தக் கொள்கை ஊடாக, அரசாங்கத்தின் செலவினங்களை குறைத்து பொருளாதாரத்தை மேம்படுத்தலாம் என்றும் அவர் தெரிவித்தார்.
இடைக்காலக் கணக்கறிக்கையை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்து உரையாற்றிய போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்துரையாற்றிய அவர், இந்த ஆண்டுக்கான மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2.3 சதவீதத்துக்கும் அதிகமான அளவைத் தாங்கிக் கொள்வதற்கு வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. 2019ஆம் ஆண்டு வரவு - செலவுத் திட்டப் பற்றாக்குறை 6.8 சதவீதமாக இருப்பதாக அறிவிக்கப்பட்ட போதிலும், உண்மையில் இந்தச் செலுத்தப்படாத கட்டணங்களுடன் நோக்கும் போது, வரவு - செலவு திட்ட பற்றாக்குறை 9 சதவீதத்துக்கும் அதிகமாக உள்ளது” என்றார்.
இவை அனைத்தினாலும், பொருளாதார நடவடிக்கைகள் சீர்குலைந்துக் காணப்பட்டன. எமது நாட்டு மக்களுக்கு உள்ள ஆக்கபூர்வமான தொழில் முயற்சிகளின் மூலம் பயனடைவதற்கு தற்போதுள்ள பொருளாதார கட்டமைப்பில் இடமில்லை. இந்த நிலைமையை கடந்த ஆண்டுகளில் நாட்டில் இருந்த எந்தவொரு ஆட்சியாளரினாலும் புரிந்துகொள்ள முடியாது போனது.
“கொவிட் தொற்று பரவுவதற்கு முன்னதாகவே வீழ்ச்சியடைந்த பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதற்கு, பொருளாதாரத்தை புதுப்பிப்பதற்கான முயற்சி என்ற தொகுப்பு அரசாங்கத்தினால் அறிமுகப்படுத்தப்பட்டது. சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு, குறைந்த வட்டி வீதத்தில் கடன் வழங்குதல் மற்றும் அப்போதைய கடன்களை மறுசீரமைப்பதற்கு ஆரம்பிக்கப்பட்டது.
“கொவிட் தொற்றுக்கு பின்னர் நாட்டை முடக்கும் செயற்பாடு ஆரம்பிக்கப்பட்டு ஒரு மாதம் செல்வதற்கு முன்னதாக ஏற்படக்கூடிய ஆபத்து நிலை குறித்து விளங்கிக் கொண்டு, அதனைவிட பரந்த தொகுப்பொன்றை பொதுமக்களுக்கு அறிமுகப்படுத்தினோம். இதன் மூலம், நாட்டின் தொழில்முனைவோர் மற்றும் உள்ளூர் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடுவோருக்கு நாம் எதிர்பாராத வகையில் பொருளாதாரத்தில் செயற்பட்டு நீடித்திருக்க முடிந்துள்ளது. ஏற்றுமதி வருவாய் எதிர்பாராத விதமாக அதிகரித்துள்ளது.
“இவ்வாறான சூழ்நிலையில்தான் ஜனாதிபதியின் சுபீட்சத்தின் நோக்கு கொள்கை பிரகடனம் முன்வைக்கப்பட்டது. இந்த கொள்கை உள்ளூர் வர்த்தகர்களை அடிப்படையாகக் கொண்ட கொள்கையாகும். இந்த கொள்கையின் ஊடாக நாட்டின் அனைத்து மூலை முடுக்குகளிலுமுள்ள பிரஜைகளின் அடிப்படை உரிமை, அதாவது பொருளாதார ரீதியில் பலமான பாதுகாப்பான நாட்டில் வாழ்வதற்கான விருப்பத்தை நிறைவேற்றி கொடுப்பதற்கு திறன் உள்ளது. இந்த பரந்த அபிலாஷையை அடைவதற்கு ஏற்ற வகையில், நாட்டின் உள்ளூர் பொருளாதாரம் குறித்து விரிவாக ஆராய்ந்த பின்னரே அமைச்சுகளின் நோக்கங்கள் தீர்மானிக்கப்பட்டன.
“2020 ஆம் ஆண்டுக்கான குறை நிரப்பு மதிப்பீட்டை சமர்ப்பிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. 2020 செப்டம்பர் முதல் டிசம்பர் வரையான 4 மாத காலத்துக்கான அரசாங்கத்தின் செலவுகளை ஈடுசெய்வதற்கு, ரூபாய் 1,900 பில்லியனை ஒதுக்கிக் கொள்வதற்கும் அதற்காக ரூபாய் 1,300 பில்லியன் கடன் வரம்பை அங்கிகரித்துக் கொள்வதற்கே, இந்த குறை நிரைப்பு மதிப்பீடு முன்வைக்கப்படுகிறது. 2020ஆம் ஆண்டுக்கான இந்தக் குறை நிரப்பு மதிப்பீடுகள் அனைத்தையும், ஒதுக்கீட்டுச் சட்டங்கள் மூலம் நாங்கள் முன்வைப்போம்.
2020ஆம் ஆண்டின் முதல் 8 மாதங்களின் மொத்த அரச வருவாய் ரூபாய் 910 பில்லியன் பெற்றுக் கொள்ளப்பட்டிருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது. முதல் 8 மாதங்களில், அரச ஊழியர்களின் ஊதியத்துக்கா 521 ரூபாய் பில்லியன் செலவிடப்பட்டது. அதில், வட்டி செலுத்துவதற்கு 675 பில்லியன் ரூபாய் செலவிடப்பட்டதுடன், அரச மானியங்கள் மற்றும் பிற வளாகங்களுக்கு, சுமார் 390 பில்லியன் ரூபாய் செலவாகின்றது. அதில், 2019ஆம் ஆண்டு முதல் செலுத்தப்படாத கட்டணங்களைச் செலுத்துவதற்கு, பாரிய தொகையை செலவிட வேண்டியுள்ளது. அதன்படி, அரசாங்கத்தின் செலவு ஒருவாறு நிர்வகிக்கப்பட்டுள்ளதுடன், எதிர்காலத்தில் அதிக பொருளாதார வளர்ச்சி விகிதத்துடன் அரசாங்க வரவு - செலவுத் திட்டப் பற்றாக்குறையை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் ரூபாய் 9 பில்லியனை அண்மித்த அனைத்துத் திட்டக் கடன்களையும் மீளாய்வுச் செய்வதற்கு, அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதில் சில திட்டங்கள் உள்ளூர் ஒப்பந்தக்காரர்களினால் குறைந்த விலையில் நிறைவு செய்யக்கூடியவையாகும். சில திட்டங்களினால் உண்மையில் சமூக அல்லது பொருளாதார ரீதியில் எவ்வித நன்மைகளும் இல்லை. இதன் மூலம் திட்டங்களை செயற்படுத்துவதனை முழுமையாக நிறுத்துவது என்று பொருள்படாது.” என்று, பிரதமர் மேலும் குறிப்பிட்டார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
57 minute ago
2 hours ago
2 hours ago