Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 23, திங்கட்கிழமை
Editorial / 2019 ஜூன் 18 , பி.ப. 05:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.ஷிவானி
எமது நாட்டில் நான்கு அரசாங்கங்கள் தற்போது ஆட்சியில் உள்ளனவெனத் தெரிவித்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தயாசிறி ஜயசேகர, அவற்றைப் பட்டியலிட்டுக் காட்டினார்.
இதற்கமைய, நாட்டில், ஜனாதிபதியின் ஆட்சியும், பிரதமரின் ஆட்சியும், சபாநாயகரின் ஆட்சியும், எதிர்க்கட்சித் தலைவரின் ஆட்சியும் காணப்படுவதாக அவர் சுட்டிக்காட்டினார்.
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தலைமையகத்தில் இன்று (18) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே, அவர் இதனைத் தெரிவித்தார்.
இதன்போது தொடர்ந்து கருத்துரைத்த அவர், சபாநாயகர் கரு ஜயசூரிய, கடந்த ஒக்டோபர் மாதம் 26 ஆம் திகதி சம்பவத்துக்குப் பின்னர் இருந்தே, அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்குவது குறித்த தயார்படுத்தல்களை முன்னெடுத்து வருகிறார் எனவும் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
16 minute ago