Freelancer / 2021 ஓகஸ்ட் 17 , பி.ப. 02:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
மக்களின் பாதுகாப்புக்காக இரண்டு வாரங்களுக்கு நாட்டை முடக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்தார்.
பாராளுமன்றத்தில் இன்று (17) உரையாற்றும் போதே அவர் மேற்கண்ட கோரிக்கையை முன்வைத்தார்.
தடுப்பூசி போடும் பணியில் முழு ஆதரவு வழங்கும் இராணுவம் உள்ளிட்ட பாதுகாப்பு படையினருக்கும் நன்றி தெரிவித்த அவர், மனித உயிர்களை காப்பாற்றவும், நாட்டில் கொரோனா தடுப்பூசியை துரிதப்படுத்தவும் அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.
மேலும், மூன்றாவது தடுப்பூசியும் கொடுக்கப்பட வேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
2 hours ago
2 hours ago
2 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
2 hours ago
5 hours ago