2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

நாமல், நாலகவுக்கு வெளிநாடு செல்லத் தடை

Editorial   / 2018 ஒக்டோபர் 08 , மு.ப. 10:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஊழல் ஒழிப்பு பிரிவின் நடவடிக்கை பணிப்பாளர் நாமல் குமாரவும் பயங்கரவாத விசாரணைப் பிரிவின் முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் நாலக டீ சில்வாவும்  வெளிநாடு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இவ்விருவரும், கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் இன்று (08​) ஆஜராகினர். இதன்போதே, நீதவான் மேற்கண்டவாறு உத்தரவிட்டுள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஸ ஆகியோரைக் கொலை செய்வதற்கு, சதித்திட்டம் தீட்டிய சம்பவம் தொடர்பில் தகவல்களை வெளிப்படுத்தினர், என இவ்விருவருக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .