2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

‘நாளை பலத்த காற்று வீசுவதற்கான சாத்தியம்’

Editorial   / 2019 ஜனவரி 14 , பி.ப. 03:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டின் கரையோர பகுதிகளில் நாளைய தினம் காற்றின் வேகம் அதிகரிக்குமென, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுக்கூறியுள்ளது.

மன்னாரிலிருந்து புத்தளம் மற்றும் கொழும்பு வரையில் பலப்பிட்டிய கடற்கரை பிரதேசங்களிலும் மற்றும் அம்பாந்தோட்டையிலிருந்து மட்டக்களப்பு, திருகோணமலை ஆகிய கடற்கரை பிரதேசங்களிலும் பலமாக காற்று வீசக்கூடுமென்றும்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்காரணமாக மீனவர்கள் மற்றும் கடல் நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள் மிகவும் அவதானத்துடன் செயற்படுமாறு திணைக்களத்தால் கோரப்பட்டுள்ளது.

அத்தோடு, நாளை சப்ரகமுவ, மத்திய, ஊவா ஆகிய மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களிலும்  75 மில்லிமீற்றருக்கு அதிகமானளவில் பலத்த மழை பெய்யக்கூடுமென்றும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .