2025 ஜூன் 20, வெள்ளிக்கிழமை

நாளை மறுதினத்திலிருந்து ’சிசுசெரிய’

Editorial   / 2020 செப்டெம்பர் 13 , பி.ப. 04:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு மாவட்டத்திலுள்ள பாடசாலை மாணவர்களின் போக்குவரத்துக்காக நாளை மறுதினத்திலிருந்து (15)  சிசுசெரிய பாடசாலை பஸ் போக்குவரத்து சேவை ஆரம்பமாகவுள்ளதாக, போக்குவரத்து அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார்.


இதற்காக 200 புதிய பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.


குறித்த சிசுசெரிய பஸ் சேவைக்காக இவ்வளவு காலமும் பயன்படுத்தப்பட்டு வந்த பழைய பஸ்களுக்குப் பதிலாக, வசதிகளுடன், தூய்மையான பஸ்களை பயன்படுத்துமாறு, சகல டிப்போ முகாமையாளர்களுக்கும் ஆலோசனை வழங்கியுள்ளதாகவும் எதிர்வரும் நாள்களில் ஏனைய பிரதேசங்களுக்கும் இந்த சிசுசெரிய பஸ் சேவையை நடத்த நடவடிக்கை எடுப்பதாகவும் அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .