2025 ஓகஸ்ட் 13, புதன்கிழமை

நீங்கள் முட்டையை சேகரிப்பவரா?: அப்படியாயின் கவனம்

Editorial   / 2022 ஓகஸ்ட் 22 , பி.ப. 01:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

உற்பத்தியாளர்களினால் அநாவசியமாக சேகரிக்கப்படும் முட்டைகளை அரசுடைமையாக்கப்படும் என வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். 

முட்டைக்கான கட்டுப்பாட்டு விலையை அடுத்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் இதன்போது குறிப்பிட்டார். 

ஓகஸ்ட்(19) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில், முட்டைக்கு அதிகபட்ச சில்லறை விலையை நிர்ணயித்து அதிவிசேட வர்த்தமானி  வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி வெள்ளை முட்டை ஒன்றின் அதிகபட்ச சில்லறை விலை 43 ரூபாயாகும்.

கபில நிற முட்டை ஒன்றின் அதிகபட்ச சில்லறை விலை 45 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை முட்டைகளுக்கு நிர்ணய விலை அறிமுகப்படுத்தப்பட்டதால் சந்தைகளில் முட்டைகளுக்கு தட்டுபாடு நிலவுவதாக நுகர்வோர் தெரிவிக்கின்றனர்.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .