Freelancer / 2021 டிசெம்பர் 12 , பி.ப. 05:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
நுவரெலியா பிரதேசத்தில் கேபிள் கார் திட்டத்தை நிர்மாணிப்பதற்கான ஒப்பந்தத்தில் ஸ்வீடன் நாட்டு நிறுவனத்துடன் அரசாங்கம் கைச்சாத்திட்டுள்ளதாக தெரியவருகிறது.
2 கட்டங்களைக் கொண்ட கேபிள் கார் திட்டத்தின் கட்டுமானப் பணிகள் 18 மாதங்களுக்குள் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நானுஓயாவிலிருந்து நுவரெலியா வரை 4 கிலோமீற்றர் தூரத்துக்கு இரண்டு கட்டங்களாக நிர்மாணிக்கப்படும் இந்த கேபிள் கார் பாதையானது, சுவீடன் வெளிநாட்டு உதவித் திட்டத்தின் கீழ் முழுமையாக நிதியளிக்கப்பட்டுள்ளது.
55 மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் 30 ஆண்டு குத்தகைக்கு இந்த திட்டம் உருவாக்கப்படும் என்றும் இது தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம், நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் கேட்போர் கூடத்தில் சமீபத்தில் கைச்சாத்திடப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது.
5 hours ago
5 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
5 hours ago
8 hours ago