2025 ஜூன் 25, புதன்கிழமை

நெல் விலை 5 ரூபாயால் அதிகரிப்பு

Editorial   / 2019 ஓகஸ்ட் 12 , பி.ப. 03:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

நெல் கிலோகிராம் ஒன்றின் கொள்வனவு விலையை 5 ரூபாயால் அதிகரிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இதற்கமைய, 41 ரூபாய்க்கு காணப்பட்ட சம்பா  நெல் கிலோகிராம் ஒன்றின் புதிய விலை  46 ரூபாயாகவும், 38 ரூபாய்க்கு காணப்பட்ட நாட்டரிசி  கிலோகிராம் ஒன்றின் புதிய விலை 43 ரூபாயாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

விவசாயிகளின் உற்பத்தி செலவுக்கு நிகரான வகையில், பல வருடங்களாக நெல்லின் விலையில் திருத்தம் மெற்கொள்ளப்படவில்லையென,  விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

அத்துடன், புதிய விலை திருத்தம் குறித்த அமைச்சரவைப் பத்திரத்தை,  அமைச்சரவையில் சமர்ப்பிக்க உள்ளதாக, விவசாய அமைச்சர் பீ. ஹரிசன் தெரித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .