2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

நேற்று 167ஆக உயர்ந்த கொரோனா மரணங்கள்

Freelancer   / 2021 ஓகஸ்ட் 16 , பி.ப. 08:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொரோனா தொற்றுக்கு உள்ளாகி நேற்றையதினம் மேலும் 167 பேர் உயிரிழந்துள்ளனர் என அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.

103 ஆண்களும் 64 பெண்களுமே உயிரிழந்துள்ளனர் என்பதுன், 60 வயதுக்கு மேற்பட்ட 130 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 30 தொடக்கம் 59 வயதுக்கு இடைப்பட்டோரில் 36 பேர் மரணித்துள்ளனர். 30 வயதுக்குக் கீழ் ஒருவர் மரணித்துள்ளார்.

அதன் அடிப்படையில்,  கொரோனா தொற்றுக்கு உள்ளாகி  6,263 பேர் உயிரிழந்துள்ளனர்.

நாட்டில் மேலும் 3,414 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும் இலங்கையின் மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 362,022 ஆக அதிகரித்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, கொரோனா கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 2,325 பேர் இன்றையதினம் குணமடைந்துள்ளனர். அதன்படி, 312,057  பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என்பதுடன் 43,859 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X