Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 09, திங்கட்கிழமை
Gavitha / 2016 ஓகஸ்ட் 10 , மு.ப. 03:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாகிஸ்தான் பிரஜைகள் இருவர் கைது
சுற்றுலா விசாவில் இலங்கைக்கு வந்து, கண்டியில் உள்ள உணவகமொன்றில் பணியாற்றிக்கொண்டிருந்த இரண்டு பாகிஸ்தான் பிரஜைகளை, நேற்று செவ்வாய்க்கிழமை (09) பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கண்டி, தலதா வீதியிலுள்ள மணிக்கூட்டு கோபுரத்துக்கு அருகிலுள்ள உணவகம் ஒன்றில், 39 மற்றும் 48 வயதுகளையுடைய இந்த பாகிஸ்தான் பிரஜைகள் இரகசியமாக பணிப்புரிந்து வந்துள்ளனர்.
இவர்களுடைய சுற்றுலா விசா காலாவதியாகியுள்ளதாகவும் இவர்கள் குடிவரவு, குடியகல்வு திணைக்களத்தில் ஒப்படைக்கப்படவுள்ளனர்.
சங்கிலியை பறித்த இருவர் கைது
நடுத்தர வயதுடைய பெண்ணொருவரின் கழுத்திலிருந்த 80 ஆயிரம் ரூபாய் பெறுமதியுடைய தங்கச்சங்கிலியை பறித்துகொண்டுச் சென்ற இரண்டு சந்தேக நபர்களை, மாத்தறை பொலிஸார் நேற்று செவ்வாய்க்கிழமை (09) கைது செய்துள்ளனர்.
மாத்தறை, எலவெல்ல வீதியில் நடந்து சென்றுக்கொண்டிருந்த பெண்ணின் கழுத்திலிருந்து தங்கச் சங்கிலியை, அவ்வழியே மோட்டார் சைக்கிளில் வந்த நபர்கள் பறித்துக்கொண்டுச் சென்றுள்ளனர்.
சந்தேக நபர்கள் மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.
கப் ரக வாகனத்தில் மோதி ஒருவர் பலி
அநுராதபுரம், ரஜன்கனய பகுதியில், கப் ரக வாகனமொன்று மோதி அதே பகுதியைச் சேர்ந்த 53 வயதுடைய நபரொருவர் உயிரிழந்துள்ளார்.
புத்தளத்திலிருந்து அநுராதபுரத்தை நோக்கிச் சென்றுக்கொண்டிருந்த கப் ரக வாகனமே குறித்த நபரை மோதியுள்ளது.
தனியார் கம்பனியொன்றுக்குச் சொந்தமான கப் ரக வாகனம் மோதியதில் படுகாயமடைந்த குறித்த நபர், அதே வாகன சாரதி நொச்சியாகம வைத்தியசாலைக்குக் கொண்டுச் சென்றுள்ளார். எனினும் அவர் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்ததையடுத்து, சாரதி ரஜன்கனய பொலிஸ் நிலையத்தில் தானாகவே சரணடைந்துள்ளார்.
மின்சார வேலியில் சிக்கி ஒருவர் பலி
காலி, யகலமுல்ல பகுதியில், காட்டுப்பன்றிகளை வேட்டையாடுவதற்காக பொருத்தப்பட்டிருந்த மின்சார வேலியில் சிக்கி, நபரொருவர் உயிரிழந்துள்ளார்.
மின்சார தாக்குதலுக்குள்ளான நபரை, காலி, இமதூவ மாவட்ட வைத்தியசாலையில் அனுமதித்தப் போதும் அவர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
37 minute ago
39 minute ago
40 minute ago
48 minute ago