Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 ஏப்ரல் 30, செவ்வாய்க்கிழமை
Simrith / 2024 ஏப்ரல் 17 , மு.ப. 10:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
‘சூரிய மங்கல்ய’ பாடலை சமூக வலைதளங்களில் திரித்து பகிர்ந்த குற்றச்சாட்டின் பேரில் கலால் திணைக்கள அதிகாரி ஒருவர் வாரியபொலவில் கைது செய்யப்பட்டுள்ளார்.
மூத்த கலைஞர் ரோஹன பெத்தகே ரன்வல படையினருடன் இணைந்து பாடிய இந்த பாரம்பரிய புத்தாண்டு பாடலை சிதைத்தமை தொடர்பில் பொலிஸ்மா அதிபரிடம் முறைப்பாடு செய்யப்பட்டதை அடுத்து குற்றப் புலனாய்வுப் பிரிவின் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
தலத்துஓயாவைச் சேர்ந்த 31 வயதுடைய கலால் அதிகாரி ஒருவரைக் கைது செய்யும் நோக்கில் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவின் வடமேற்கு மாகாணப் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டனர்.
சந்தேக நபர் வாரியபொல பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டதுடன், இன்று குளியாப்பிட்டி நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
8 hours ago
29 Apr 2024
29 Apr 2024