2025 ஜூலை 07, திங்கட்கிழமை

படலைக்கு பூட்டு: தவிக்கின்றது அமைச்சர் குழு

Editorial   / 2025 ஜூலை 06 , பி.ப. 03:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

அனுராதபும் நுவரவாவிக்கான சுற்றுலா பயணத்தை முடித்துக்கொண்டு, வேகந்த வழியாக வெளியேறுவதற்கு வந்த அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய குழுவை, வேகந்தவுக்குள் வைத்து, அதன் படலைக்கு பூட்டுபோட்டமையால், அந்த குழு பெரும் சிரமங்களுக்கு முகங்கொடத்து  சிக்கித் தவித்தனர்.

சுற்றுலா துணை அமைச்சர் ருவன் ரணசிங்க, பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் சேன நாணயக்கார, வடமத்திய மாகாண ஆளுநர் வசந்த ஜினதாச மற்றும் ஒரு குழுவுடன் இந்த சுற்றுப்பயணத்தில் இணைந்தனர்.

சுற்றுலா துணை அமைச்சர் மற்றும் அவரது குழுவினர் அட்டமஸ்தானாதிபதி பல்லேகம ஹேமரதன தேரரை சந்தித்து, அனுராதபுர மாவட்டத்தை சுற்றுலா மையமாக மாற்றும் அரசாங்கத்தின் திட்டம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த குறித்து விளக்கமளித்துவிட்டு அவரது ஆசிர்வாதத்தை பெற்றுக்கொண்டனர்.

நீர்ப்பாசனத் துறை குளக் கரையில் ஒரு வாயிலைத் திறந்த பிறகு, சுற்றுலா துணை அமைச்சர் மற்றும் அவரது குழுவினர் குளத்தின் ஆய்வுப் பயணத்தைத் தொடங்கினர்.

அவர்கள் வெளியேறவிருந்தபோது, ​​வாயில்கள் பூட்டப்பட்டு இருந்தன. இதனால் வெளியேறுவதில் அந்த குழு கடுமையாக சிரமப்பட்டது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .