2025 மே 31, சனிக்கிழமை

போதைப்பொருளுடன் சிறைச்சாலை காவலர் கைது

Janu   / 2025 மே 29 , மு.ப. 11:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

போதைப்பொருளுடன், பொரளை ​மெகசின் சிறைச்சாலைக்குள் நுழைய முயன்ற சிறைச்சாலை காவலர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொரளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபர் பொரளை அவசர நடவடிக்கை முகாமைச் சேர்ந்தவராவர்.  

சந்தேக நபரிடமிருந்து  16,112 மில்லிகிராம் ஹெரோயின், 12,924 மில்லிகிராம் ஐஸ் மற்றும் 73,855 மில்லிகிராம் புகையிலை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

 சந்தேக நபர் சிறைச்சாலைக்குள் இந்த போதைப் பொருட்களை விற்பனை செய்து வந்தாரா என்பதை கண்டறிய பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .