S.Renuka / 2025 டிசெம்பர் 30 , மு.ப. 11:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
2025ஆம் ஆண்டிற்காக இலங்கை ஆயுர்வேத மருந்துக் கூட்டுத்தாபனத்தால் அடையாளம் காணப்பட்ட 07 புதிய தயாரிப்புகளின் வெளியீடு இன்று செவ்வாய்க்கிழமை (30) காலை 10.00 மணிக்கு நாவின்ன ஆயுர்வேத மருந்துக் கூட்டுத்தாபன கேட்போர் கூடத்தில் சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ தலைமையில் நடைபெற வுள்ளது.
இலங்கை ஆயுர்வேத மருந்துக் கூட்டுத்தாபனமானது மேலும் குப்ஜா பிரசாரணி எண்ணெய், பல கொரண்டா எண்ணெய், பஞ்சவல்கலா சூர்ணா, சன்ஸ்தா எலும்பு மஜ்ஜை பட்டுவா மற்றும் மூலிகை தயாரிப்புகளான பிண்டா தைலம், ரத்ததுன் பாடி வாஷ் மற்றும் பஞ்சவல்கலா ஷாம்பு ஆகிய மருந்துப் பொருட்களை நாளை அறிமுகப்படுத்த உள்ளது.
இலங்கை ஆயுர்வேத மருந்துகள் கூட்டுத்தாபனத்தின் விநியோகச் செயல்பாட்டில் அரச துறையும் முன்னணியில் உள்ளது, மேலும் 2024 ஆம் ஆண்டில் அரச துறையால் மேற்கொள்ளப்பட்ட கொள்முதல்களின் அடிப்படையில் இது அமைந்துள்ளது.
தற்போது, இலங்கை ஆயுர்வேத மருந்துகள் கூட்டுத்தாபனம் ஆயுர்வேத மருந்துகளின் உற்பத்தியில் முன்னோடியாக உள்ளது, 194 தயாரிப்புகள் மற்றும் சுமார் 450 உற்பத்திகள் காணப்படுகின்றன.
56 ஆண்டுகளுக்கும் மேலாக, இலங்கை ஆயுர்வேத மருந்துகள் கூட்டுத்தாபனம் ஆயுர்வேத மருந்துகள் மற்றும் மூலிகைப் பொருட்களை உற்பத்தி செய்து, ஆயுர்வேத மருத்துவமனைகள், ஆயுர்வேத மருந்தகங்கள் போன்றவற்றுக்கு நாடு முழுவதும் விநியோகிக்கின்றது.
இந்த நிகழ்வில், இலங்கை ஆயுர்வேத மருந்துகள் கூட்டுத்தாபனத்தின் தலைவர் கீதாமணி சி.கருணாரத்ன, நிர்வாக இயக்குநர் டாக்டர் எம்.ஜே.மாரசிங்க, சுகாதார மற்றும் ஊடக அமைச்சின் அதிகாரிகள், ஆயுர்வேதத் துறை மற்றும் மாகாண ஆயுர்வேதத் துறைகளின் அதிகாரிகள், உள்ளூர் ஆயுர்வேத பல்கலைக்கழகங்களின் ஆயுர்வேத மருத்துவ பீடங்களின் பீடாதிபதிகள் மற்றும் ஆயுர்வேதத் துறையுடன் தொடர்புடைய அதிகாரிகள் பங்கேற்கவுள்ளனர்.
4 minute ago
12 minute ago
22 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
12 minute ago
22 minute ago
1 hours ago