2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

‘பதவி விலகல் கடிதம் ஜனாதிபதி செயலகத்துக்குக் கிடைக்கவில்லை’

Editorial   / 2019 ஜூன் 05 , பி.ப. 12:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடந்த 3ஆம் திகதி அமைச்சுப் பதவிகளிலிருந்து  விலகிய முஸ்லிம் அமைச்சர்களின் பதவி விலகல் கடிதமானது, ஜனாதிபதி செயலகத்துக்கு இதுவரை கிடைக்கவில்லையென, ஜனாதிபதி செயலாளர் உதய ஆர். செனவிரத்ன தெரிவித்துள்ளார்.

 

அமைச்சர்கள் பதவி விலகியதன் பின்னர், அது தொடர்பான கடிதம் பிரதமர் அலுவலகத்தில் இருந்து ஜனாதிபதி செயலகத்துக்கு கிடைக்கவில்லையென்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அமைச்சுப் பதவிகளிலிருந்து விலகியுள்ள அமைச்சர்கள் நாடாளுமன்றத்தில் முன்வரிசையில்  அமர்ந்திருப்பதாக, நேற்று சபையில் குற்றஞ்சாட்டப்பட்ட நிலையில், இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் நாடாளுமன்றத்துக்கு கிடைக்கவில்லையென நாடாளுமன்றத்தில் சுட்டிக்காட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .