2026 மே 02, சனிக்கிழமை

பரீட்சைகள் திணைக்கள அதிகாரியின் கணவனுக்கு கொரோனா?

J.A. George   / 2020 ஒக்டோபர் 15 , பி.ப. 02:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

பரீட்சைகள் திணைக்களத்தின் விசாரணைகள் பிரிவில் கடமையாற்றும் பெண் அதிகாரியின் கணவனுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக சமூக ஊடகங்களில் வெளியான  தகவல் பொய்யானது என, அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.

அறிக்கையொன்றை வெளியிட்டள்ள பரீட்சைகள் திணைக்கள ஆணையாளர் நாயகம் பூஜித, வைத்தியர்களின் அறிவுரைக்கு அமைய குறித்த அதிகாரியின் கணவன் இரண்டு சந்தர்ப்பங்களில் பீ.சீ.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.

பரிசோதனையின் பெறுபேறுகளுக்கு அமைய குறித்த அதிகாரியின் கணவருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்படவில்லை என்பது உறுதியாகியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .