2025 ஓகஸ்ட் 12, செவ்வாய்க்கிழமை

பாலத்துக்கு கீழே பல்டி அடித்த பௌசர் : பலரின்‌ நிலைமை கவலைக்கிடம்

Janu   / 2025 ஓகஸ்ட் 12 , மு.ப. 10:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு - மட்டக்களப்பு பிரதான வீதியில் பத்துஓயா பாலத்திற்கு அருகில் இன்று (12) அதிகாலை 3.30 மணி அளவில் தனியார் பேருந்து ஒன்று டிப்பர் ​லொறியுடன் மோதிய விபத்தில் 28 பேர் காயமடைந்தனர்.

 இவர்கள், பொலன்னறுவை, மின்னேரியா மற்றும் ஹிங்குராங்கொட மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மின்னேரியா பொலிஸார் தெரிவித்தனர்.

அவர்களில் பலரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக பொலன்னறுவை பொது மருத்துவமனையின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறினார்.

 அப்பகுதி மக்கள் பெரும் முயற்சி எடுத்து டிப்பர் லாரியின் சாரதியை மீட்டு பொலன்னறுவை பொது மருத்துவமனையில் அனுமதித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .