2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

பொலிஸார் குறித்து விசேட அறிவித்தல்

Simrith   / 2023 ஜூன் 01 , பி.ப. 12:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாதுகாப்பு தேவையில்லாத இடங்களைப் பாதுகாப்பதற்காக நியமிக்கப்பட்டுள்ள பொலிஸ் உத்தியோகத்தர்களை நீக்கி அவர்களை பொலிஸ் நிலையங்களுக்கு நியமிக்குமாறு பொது பாதுகாப்பு அமைச்சர் டிரன் அலஸ் நேற்று பொலிஸ் மா அதிபருக்கு நேற்று (31) பணிப்புரை விடுத்துள்ளார்.

தற்போது 5,400 பொலிஸ் உத்தியோகத்தர்கள் சில நபர்கள் மற்றும் குறிப்பிட்ட சில இடங்களைப் பாதுகாக்க நியமிக்கப்பட்டுள்ளனர். அவ்வாறான நபர்கள் மற்றும் இடங்களுக்கு பொலிஸாரின் பாதுகாப்பு தேவையா என்பதை உறுதிப்படுத்துவதற்கு முறையான மதிப்பீட்டை மேற்கொள்ளுமாறு பொலிஸ் மா அதிபருக்கு குறிப்பிட்ட அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறாக சில நபர்கள் மற்றும் சில பிரதேசங்களுக்கு பொலிஸார் பாதுகாப்பிற்கு அமர்த்தப்பட்டுள்ளதால், பொலிஸ் நிலையங்களில் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கான தட்டுப்பாடு நிலவுவதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .