2025 ஓகஸ்ட் 13, புதன்கிழமை

பல்கலைக்கழகங்கள் செப். முதல் ஆரம்பம்

Freelancer   / 2022 ஓகஸ்ட் 22 , பி.ப. 04:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையில் உள்ள அனைத்து அரச பல்கலைக்கழகங்களிலும் செப்டெம்பர் மாதம் முதல் கல்வி நடவடிக்கைகள் மீள ஆரம்பிக்கப்படும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு உறுதிப்படுத்தியுள்ளது.

நாட்டில் நிலவும் சாதாரண நிலை காரணமாக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் சம்பத் அமரதுங்க தெரிவித்தார்.

கொரோனா தொற்று மற்றும் நாட்டின் தற்போதைய பொருளாதார சூழ்நிலை காரணமாக, பெரும்பாலான பல்கலைக்கழகங்களின் கல்வி நடவடிக்கைகள் ஒன்லைனில் இடம்பெற்று வருகின்றன.

கடந்த சில மாதங்களாக மாணவர்கள், பல்கலைக்கழகத்துக்கு சமுகமளிக்காத நிலை காணப்பட்டிருந்த நிலையில், செப்டெம்பர் முதல் நேரடியாக சமுகமளிக்க வேண்டும் என்ற தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .