Janu / 2026 மார்ச் 11 , பி.ப. 03:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
சீதுவை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நீர்கொழும்பு வீதி பகுதியில் மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கி வந்த விபச்சார விடுதியொன்றை சீதுவை பொலிஸார் முற்றுகையிட்டுள்ளனர்.
திங்கட்கிழமை (09) மாலை முன்னெடுக்கப்பட்ட இந்தச் சோதனையின் போது 7 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களில் விடுதியை நிர்வகித்த குற்றச்சாட்டில் 23 வயதுடைய இளைஞன் ஒருவரும், அங்கு தங்கியிருந்த 25 முதல் 40 வயதுக்கு இடைப்பட்ட 6 பெண்களும் அடங்குவதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட பெண்கள் கடுவலை, கம்பஹா, நீர்கொழும்பு, பதலங்கல மற்றும் மாத்தளை ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளைச் சீதுவை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
38 minute ago
53 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
38 minute ago
53 minute ago
1 hours ago