2025 மே 22, வியாழக்கிழமை

பூவரசங்குளம் பொலிஸ் பொறுப்பதிகாரிக்கு விளக்கமறியல்

Janu   / 2025 மே 22 , பி.ப. 04:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலஞ்சம் வாங்கும் போது கைது செய்யப்பட்ட வவுனியா பூவரசங்குளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எதிர்வரும் 27ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். 

வவுனியா பூவரசங்குளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி 5 இலட்சம் ரூபாய் இலஞ்சம் பெற முற்பட்ட போது  இலஞ்சம் அல்லது  ஊழல்  பற்றிய சாத்துதல்களைப் புலனாய்வு செய்யும் ஆணைக்குழுவின் அதிகாரிகளால் புதன்கிழமை (21) கைது செய்யப்பட்டிருந்தார்.

கொழும்பில் இருந்து வருகை தந்த குறித்த ஆணைக்குழுவின் அதிகாரிகளால் கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

கைது செய்யப்பட்டவர் வவுனியா நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது அவரை எதிர்வரும் 27ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டதுடன் குறித்த வழக்கு 27ஆம் திகதிக்கு பின்னர் கொழும்பு நீமன்றுக்கு மாற்றப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது 

க. அகரன்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X