2025 நவம்பர் 01, சனிக்கிழமை

பஸ் விபத்தில் நால்வர் மரணம்

Freelancer   / 2025 ஒக்டோபர் 31 , பி.ப. 07:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

கதுருவெலவில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த தனியார் பஸ் ஒன்று நிறுத்தப்பட்டிருந்த போது, பின்னால் வந்த மற்றொரு தனியார் பஸ் நிறுத்தப்பட்டிருந்த பேருந்தின் பின்புறத்தில் மோதியதில் 28 பேர் படுகாயமடைந்த நிலையில், அவர்களில் நால்வர் உயிரிழந்துள்ளனர்.

காயமடைந்த 28 பேரும் சிகிச்சைக்காக குருநாகல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில், பின்னால் வந்த பஸ் அதிவேகமாக வந்ததால் இந்த விபத்து இடம்பெற்றதாக தெரியவந்துள்ளது.

மேலும், உயிரிழந்தவர்களின் சடலங்கள் குருநாகல் வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதோடு, விபத்து தொடர்பான பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். R


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X