2025 ஜூன் 30, திங்கட்கிழமை

பஸ் விபத்தில் இருவர் பலி: 42 பேர் காயம்

Editorial   / 2019 ஒக்டோபர் 24 , மு.ப. 10:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

எம்.எம்.அஹமட் அனாம்

கொழும்பு- மட்டக்களப்பு பிரதான வீதியின் மின்னேரியா நகருக்கு அருகில் நேற்று இரவு 11.30 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்து 42 பேர் காயமடைந்துள்ளனர்.

இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பஸ்ஸொன்றும் தனியார் பஸ்ஸொன்றும் நேருக்கு நேர் மோதியதாலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

கல்முனை போக்குவரத்து சபைக்கு சொந்தமான சாரதியான ஓட்டமாவடி மீராவோடையைச் சேர்ந்த எச்.எல்.சலீம் (வயது 53) என்பவரே சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன், காரைதீவைச் சேர்ந்த பெண்ணொருவர் வைத்தியசாலையில் வைத்து உயிரிழந்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X