Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 ஏப்ரல் 29, திங்கட்கிழமை
Freelancer / 2024 மார்ச் 21 , மு.ப. 09:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
பொலிஸ் மா அதிபரின் பணிப்புரையின் பேரில் கடந்த 19 ஆம் திகதி முதல் செயற்படுத்தப்பட்ட குற்றச் செயல்களை கட்டுப்படுத்தும் விசேட நடவடிக்கையின் ஊடாக பலர் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.
அந்த வகையில், ஐஸ், ஹெரோயின் போதைப்பொருள் மற்றும் வாள்களுடன் மூன்று குற்றக் குழுக்களைச் சேர்ந்த நான்கு பேர் நேற்று (20) கைது செய்யப்பட்டுள்ளனர்.
மருதானை, முகத்துவாரம், கிராண்ட்பாஸ் மற்றும் மாளிகாவத்தை ஆகிய பகுதிகளில் வசிக்கும் 44, 26, 23 மற்றும் 28 வயதுடையவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்களிடம் இருந்து 2 கிராம் 450 மில்லிகிராம் ஹெரோயின், 7 கிராம் 510 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள், 3 கிராம் 160 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் ஆகியன கைது செய்யப்பட்டன. கொழும்பு குற்றப் பிரிவு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.
பாதாள உலகத்துடன் நேரடி தொடர்பு வைத்திருந்த 19 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். R
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 minute ago
8 minute ago
35 minute ago
40 minute ago