2025 ஜூன் 17, செவ்வாய்க்கிழமை

‘பார்ட்டிகள் மீது சிறப்பு அணி பாயும்’

Editorial   / 2020 டிசெம்பர் 30 , மு.ப. 02:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

தனிமைப்படுத்தல் சட்ட மீறலாக இடம்பெறும் பார்ட்டிகள், ஒன்றுகூடல்கள் உள்ளிட்டவற்றை பொலிஸார் இலக்கு வைத்து, இன்றிலிருந்து நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளனர்.

“இந்த நடவடிக்கை எதிர்வரும் 31ஆம் திகதி வரையிலும் முன்னெடுக்கப்படும் என்று  பொலிஸ் பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ​​ரோஹண தெரிவித்துள்ளார்.

தனிமைப்படுத்தல் விதி மீறலாக பார்ட்டிகள், ஒன்றுகூடல்கள் ஆகியவற்றைத் தடுப்பதற்காக சிறப்பு பொலிஸ் அணியொன்று களமிறக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்

புத்தாண்டு காலத்தில் நெருங்கிய குடும்பங்களைச் சேர்ந்தவர்கள்  மாத்திரமே ஒன்றுகூட முடியும் என அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

தனிமைப்படுத்தல் சட்ட மீறலாக பார்ட்டியொன்றை ஒழுங்கமைக்கும் எவர் மீதும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அஜித் ரோஹண எச்சரித்துள்ளார்.

புத்தாண்டு காலத்தில், தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி, பார்டிகளை நடத்தும் ஹோட்டல்கள், உணவகங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொதுச் சுகாதார பரிசோதகர்கள் கடந்த வாரம் எச்சரித்திருந்தனர்.

சுகாதார அமைச்சால் வர்த்தமானியில் வெளியிடப்பட்ட சுகாதார நடைமுறைகளின்படி உள், வெளி பார்ட்டிகள் தடை செய்யப்பட்டுள்ளதாக பொதுச்சுகாதார பரிசோதகர்கள் சங்கச் செயலாளர் எம். பாலசூரிய  தெரிவித்துள்ளார்.

சமூக வலைத்தளத்தை தாங்கள் அவதானிப்பதாகவும், அண்மைய நாள்களில் பல இவ்வாறான பார்ட்டிகள் நடைபெற்ற தகவலைப் பெற்றதாகக் குறிப்பிட்டுள்ள பாலசூரிய, இவ்வாறான பார்ட்டிகளை நடத்துவது தனிமைப்படுத்தல், நோயைத் தடுப்பதற்கான வழிகாட்டல் மீறலாகக் கருதப்படும் எனக் கூறியுள்ள்ளார்.

இந்நிலையில், ஹோட்டல்கள், உணவகங்கள் நிகழ்வுகளை தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி நடத்துவது கண்டுபிடிக்கப்பட்டால் அவற்றின் அனுமதிகள் இடைநிறுத்துவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என பாலசூரிய மேலும் தெரிவித்துள்ளார். 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .