Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Simrith / 2025 மே 05 , பி.ப. 07:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
பிரதமர் ஹரிணி அமரசூரிய தனது கட்சியின் ஆதரவாளர்களை தேர்தல் பிரச்சார அமைதிக் காலத்திலும் பிரச்சாரம் செய்யச் சொன்னதன் மூலம் தேர்தல் சட்டங்களை மீறியதாக எழுந்த முறைப்பாட்டை விசாரிக்குமாறு இலங்கையின் முக்கிய தேர்தல் கண்காணிப்பு அமைப்பான சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலுக்கான மக்கள் நடவடிக்கை (PAFFREL) தேர்தல் ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக தேர்தல் ஆணைக்குழுத் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்கவுக்கு பஃப்ரல் கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளது.
"மே 3, 2025 முதல் அமைதியான காலத்திற்குப் பிறகும் கூட, பிரதமர் அமரசூரிய தனது ஆதரவாளர்களை பிரச்சாரத்தில் ஈடுபட ஊக்குவிப்பதாகக் கருதக்கூடிய ஒரு கருத்தை நாங்கள் கண்காணித்துள்ளோம். பிரதமரின் இந்தக் கருத்து, அவரது ஆதரவாளர்களை தேர்தல் சட்டத்தை மீற ஊக்குவிக்கும் செயலாகும், அதே நேரத்தில் அவர் சட்டத்தை புறக்கணித்துள்ளார்," என்று PAFFREL நிர்வாக பணிப்பாளர் ரோஹண ஹெட்டியாராச்சி தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
34 minute ago
3 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
34 minute ago
3 hours ago
3 hours ago
3 hours ago