2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

‘பிரதமர் செவிமடுத்தார்’

Editorial   / 2019 ஜூன் 04 , மு.ப. 08:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

பா.நிரோஸ்   

உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற குண்டுத் தாக்குதல்களால் பாதிக்கப்பட்டோருக்கான நிவாரணங்களை வழங்குமாறு கோருவதற்காகவே, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவைச் சந்தித்ததாகக் கூறிய எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ, தாங்கள் முன்வைத்த கருத்துகளை, பிரதமர், அமைதியாகச் செவிமடுத்தாரெனக் கூறினார்.   

அரசியல் பழிவாங்கல்கள் போன்றவற்றால் பாதிக்கப்பட்ட பொதுமக்களின் குறைகளை கேட்டறியும், “ஒம்புட்ஸ்மன் அலுவலகத்தை” (குறைகேள் அலுவலகம்), எதிர்க்கட்சி அலுவலகத்தில் ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துரைக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.  

இதன்போது, தொழிற்சங்கங்களால் முன்வைக்கப்பட்ட முறைப்பாடுகள் அடங்கிய கோவை ஒன்றும், எதிர்க்கட்சித் தலைவரிடம் கையளிக்கப்பட்டது.  

அங்கு தொடர்ந்துரைத்த அவர், உயிர்த்த ஞாயிறன்று இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்கல்களால், பொருளாதாரம், சுற்றுலாத்துறை என்பன பாதிக்கப்பட்டிருப்பதாகவும் இதனால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு நிவாரணங்களை பெற்றுக்கொடுப்பது தொடர்பில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்துக் கோரிக்கை விடுத்ததாகவும் தெரிவித்தார்.  

இதன்போது பிரதமரிடமிருந்து எவ்வாறான பதில்கள் கிடைத்ததென ஊடகவியலாளர்கள் எழுப்பியக் கேள்விக்கு பதிலளித்த எதிர்க்கட்சித் தலைவர், “நாங்கள் கூறியதை ரணில் கேட்டுக்கொண்டிருந்தார்” எனக்கூறி, கிண்டலாகச் சிரித்தார்.  

மேலும், இது தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் கலந்துரையாட எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் கூறினார்.    


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .