2025 செப்டெம்பர் 16, செவ்வாய்க்கிழமை

பிறந்து 4 நாட்களான ஆண் சிசு உயிரிழப்பு

Freelancer   / 2025 செப்டெம்பர் 13 , மு.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ். போதனா வைத்தியசாலையில் பிறந்து நான்கு நாட்களேயானா ஆண் சிசு ஒன்று உயிரிழந்துள்ளது.

இவ்வாறு உயிரிழந்த சிசு நவாலி தெற்கு, மானிப்பாயைச் சேர்ந்த கபில்நாத் பூஜிதா என்ற தம்பதிகளின் சிசுவாகும்.

கடந்த 7 ஆம் திகதி ஆண் சிசு பிறந்த நிலையில் குடல் சுழற்சி காரணமாக சத்திரசிகிச்சை மேற்கொண்டதாகவும் பின்னர் வியாழக் கிழமை (11) சிசு உயிரிழந்துள்ளது.

இம் மரணம் தொடர்பில் யாழ். போதனா வைத்தியசாலை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆறுமுகம் ஜெயபாலசிங்கம்  விசாரணைகளை மேற்கொண்டு உடற்கூற்று பரிசோதனைக்கு உத்தரவிட்டார். சாட்சிகளை மானிப்பாய் பொலிஸார் நெறிப்படுத்தினர். (a)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X