Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2019 ஏப்ரல் 03 , மு.ப. 08:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
புதிய அரசமைப்பைக் கொண்டு வரும் எதிர்பார்ப்பில் ஆட்சி பீடத்துக்கு ஏற்றப்பட்ட இந்த நல்லாட்சி அரசாங்கத்தால், அந்த எதிர்பார்ப்பு நிறைவேற்றப்படவில்லையென, தேசிய ஒருமைப்பாடு, அரச கருமமொழிகள், சமூக முன்னேற்றம் மற்றும் இந்து சமய அலுவல்கள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார்.
அத்துடன், தற்போது நடைமுறையில் இருக்கும் அரசமைப்பில் காணப்படும் மொழிக்கொள்கைகள், சட்டம் மாத்திரமே, இன்று இலங்கை வாழ் தமிழ் மக்களுக்கு எஞ்சியிருப்பதாகவும், அவர் கூறினார்.
நாடாளுமன்றத்தில், நேற்று (02) நடைபெற்ற தேசிய ஒருமைப்பாடு, அரச கருமமொழிகள், சமூக முன்னேற்றம் மற்றும் இந்து சமய அலுவல்கள் அமைச்சு, அபிவிருத்தி திறன்கள், சர்வதேச வர்த்தக அமைச்சு ஆகியவற்றுக்கான நிதியொதுக்கீடு தொடர்பான குழுநிலை விவாதத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்துரையாற்றிய அவர், மொழித் தொடர்பான முக்கிய வேலைத்திட்டங்களை, இந்த அரசாங்கமும் தமது அமைச்சும் இணைந்து முன்னெடுத்து வருவதாகவும் தெரிவித்தார்.
அரசமைப்புக்கமைய, இலங்கையின் மொழிக்கொள்கை என்று பார்க்கும் போது, சிங்களமும் தமிழும் அரச மொழிகளெனத் தெரிவித்த அவர், தமிழ் மொழியை அரச மொழியாக அமுல்படுத்தும் போது, பல சிக்கல்கள் இருப்பதாகவும் அந்தச் சிக்கல்களை முடிந்த வரை அமைச்சின் அதிகாரிகளுடன் இணைந்து தான் தீர்த்து வருவதாகவும் கூறினார்.
எமது அமைச்சின் கீழ் இயங்கும் அரச, தேசிய மொழிக் கற்கை பயிற்சி நிறுவனத்தின் பிரதான இலக்கு, தமிழ், ஆங்கிலம், சிங்களம் ஆகிய மொழிகள் தொடர்பான அறிவைப் பெற்றுக்கொள்வதற்கு விருப்பத்துடன் இருப்பவர்களுக்கு, அந்த நிறுவனத்தின் ஊடாகப் பயிற்சிகளை வழங்கி, அவர்களைச் சிறந்த ஆசிரியர்களாக உருவாக்குவதே ஆகுமெனவும் அவர் சுட்டி்டிகாட்டினார்.
இதற்கான அதிகாரம், சட்டரீதியாக தனது அமைச்சுக்கு வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அவர், இந்த வரவு – செலவுத் திட்டத்தில், இதற்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
தனது அமைச்சின் ஊடாக, 1,000 பேருக்கு மொழி பயிற்சிகளை வழங்கி, கல்வி அமைச்சு ஊடாக அவர்களை பாடசாலைகளுக்கு ஆசிரியர்களாக உள்வாங்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
வடக்கிலுள்ள மாணவர்கள் தற்போது சிங்கள மொழியைக் கற்பதற்கு ஆர்வமாகவுள்ளதாகத் தெரிவித்த அவர், அதேபோல், தெற்கிலுள்ள சிங்கள மாணவர்கள் தமிழ் மொழியைக் கற்பதற்க ஆர்வமாகவுள்ளதாகவும் இன்றைய தலைமுறையினர் இரண்டாம் மொழியைக் கற்பதற்கு ஆர்வம்காட்டுவதையிட்டு தான் மகிழ்ச்சியடைவதாகவும் கூறினார்.
பெயர்ப் பலகைகளில் 3 மொழிகளிலும் தெளிவாக இருக்க வேண்டுமென்தால், கனடா நாட்டு அரசாங்கத்துடன் மேற்கொள்ளப்பட்டுள்ள ஒப்பந்தம் ஊடாக “வன் ஸ்ரீ லங்கா” எனும் எழுத்துவடிவத்தை (பொன்ட்) உருவாக்கவுள்ளதாகத் தெரிவித்த அவர், 3 மொழிகளையும் உள்ளடக்கும் வகையில் இந்த எழுத்துவடிவம் (பொன்ட்) உருவாக்கப்படவுள்ளதாகவும் கூறினார்.
அத்துடன், அரச மொழிகள் திணைக்களம் மொரட்டுவ பல்கலைக்கழகத்துடன் இணைந்து முன்னெடுத்து வரும் வேலைத்திட்டத்துக்கு அமைய, மொழிப்பெயர்ப்பு மென்பொருள் (சொப்ட்வெயார்) ஒன்று உருவாக்கப்பட்டு வருவதாகத்த அவர், இது இன்னும் பூர்த்திசெய்யப்படவில்லையெனவும் கூறினார்.
இதன்மூலம் அரச நிறுவனங்களின் செயற்பாடுகளை, கடிதம் மூலம் மூன்று மொழிகளிலும் பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்பு கிட்டுமெனவும் அவர் கூறினார்.
மேலும், வடக்கு – கிழக்கு ஆகிய மாகாணங்களில் மாத்திரம் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் என்ற பிரச்சினை வரையறுக்கப்படவில்லையெனத் தெரிவித்த அவர், முழு நாட்டிலும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் இருப்பதாகவும் கூறினார்.
எனவே, இவர்களின் துயரத்தை முழுமையாகத் துடைத்தெறியும் முகமாக, காணாமல் போனோர் அலுவலகம் ஊடாக, இந்த அரசாங்கம் பல வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருவதாகவும், அவர் கூறினார்.
அத்துடன், இந்த அரசாங்கம் ஆட்சிபீடமேறிய போது, புதிய அரசமைப்பை கொண்டு வருமென உறுதியளித்தே, ஆட்சிக்கு வந்ததாகத் தெரிவித்த அவர், அந்தப் புதிய அரசமைப்பு உருவாக்கும் பயணமானது, அரசாங்கத்தின் தனிப் பயணமாக இல்லாது முழு நாட்டையும் உள்ளடக்கிய விடயமாகவே காணப்பட்டதாகவும் கூறினார். இந்நிலையில், தாம் எதிர்பார்த்த அந்த விடயத்தை நிறைவேற்ற முடியாமல் போனதாகவும், அவர் மேலும் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
55 minute ago
5 hours ago
6 hours ago