Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 10, செவ்வாய்க்கிழமை
Freelancer / 2022 மே 04 , மு.ப. 12:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
அரசாங்கம் வரியை அதிகரிப்பதோடு, மறுபுறம் அடக்குமுறையின் மூலம் மக்களை கொலை செய்துவருவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதி தலைவர் ருவான் விஜேவர்தன குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், நிதி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்படவுள்ள புதிய வரவு-செலவுத் திட்டத்தில் வரி அதிகரிப்பு செய்யப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இவ்வாறான நிலையில், அரசாங்கத்தின் முறையற்ற தீர்மானங்கள் காரணமாக ஏற்பட்ட நெருக்கடிக்கு தீர்வாக வரி அதிகரிக்கப்படுவதனை தமது தரப்பு எதிர்ப்பதாகவும் ருவான் விஜேவர்தன குறிப்பிட்டுள்ளார்.
பாதிக்கப்பட்ட மக்களை துப்பாக்கி குண்டுகளாலும், அச்சுறுத்துவதன் ஊடாகவும் மேலும் துன்புறுத்தல்களை மேற்கொள்வதற்கு எதிராக ஐக்கிய தேசியக் கட்சி செயற்பட்டுவருவதாகவும் கட்சியின் பிரதி தலைவர் ருவான் விஜேவர்தன மேலும் தெரிவித்துள்ளார். (a)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
10 minute ago
17 minute ago